- திண்டிகுல் திண்டிகுல்
- தாடிக்கொம்பு
- கிழக்கு மீனாக்ஷி நாயக்கன்பட்டி
- திண்டுக்கல்
- எஸ்ஐ
- அருண் நாராயணன்
- தின மலர்
திண்டுக்கல், மார்ச் 20: திண்டுக்கல் அருகே கிழக்கு மீனாட்சி நாயக்கன்பட்டி மயான பகுதியில் சிலர் பணம் வைத்து சூதாடுவதாக தாடிக்கொம்பு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து எஸ்ஐ அருண் நாராயணன் மற்றும் போலீசார் அப்பகுதிக்கு சென்று கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது அங்கு பணத்தை வைத்து சூதாடிய கும்பலை சுற்றி வளைத்து பிடித்தனர்.
விசாரணையில் அவர்கள் ராமையன்பட்டியை சேர்ந்த சந்தியாகு (42), கொட்டபட்டியை சேர்ந்த ராமன் (38), செல்வம் (58), அம்மாபட்டியை சேர்ந்த வேலுமணி (29), பேகம்பூர் ஜின்னா நகரை சேர்ந்த கனி (57), மேட்டுபட்டியை சேர்ந்த செல்வம் (43), வாண்டராயன்பட்டியை சேர்ந்த குமார் (39), சேவகவுண்டன்புதூரை சேர்ந்த ராஜகோபால் (36), ரெட்டியார்பட்டியை சேர்ந்த மணிவேல் (46) என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் 9 பேரையும் கைது செய்து, அவர்களிடமிருந்து பணம் ரூ.2,500 பறிமுதல் செய்யப்பட்டது.
The post திண்டுக்கல் அருகே பணம் வைத்து சூதாடியவர்கள் கைது appeared first on Dinakaran.